'சுனாமி' தலைப்பில் படம் வரைந்து தரச் சொன்னாராம் ஆசிரியர்.
காலையில் இருந்து யோசித்துக் கொண்டு இருந்தாள்
'கடலுக்கு அந்த நிறம் அடிக்கவா? இந்த நிறம் அடிக்கவா?
கடலை அசுரன் போலக் காட்டவா?' எனக் கேள்விகள்
'அந்தமான்' சித்தியிடம் தொலைபேசச் சொன்னேன்
சுனாமி பற்றி உண்மைப் படத்தைத் தெரிந்து கொள்ளட்டும் என
பேசி முடித்துவிட்டுக் கதறி அழுது கொண்டு இருக்கிறாள்
திக்கித் திணறி "எங்க டீச்சரிடம் என்னால் வரைய முடியாது
என சொல்லி எழுதிக் கொடுங்கள்" எனச் சொல்லிவிட்டு
இன்னும் அழுது கொண்டு இருக்கிறாள்
சித்தியிடம் கேட்டேன் என்ன சொன்னபோது உடைந்தாள் என
என்னிடம் அவர் ஏற்கனவே சொன்னதுதான்...
'எத்தனையோ பேர் கடலிடம் தப்பி ஓடிக்கொண்டு இருந்தபோது
ஒரு தந்தை மகளை இழுத்துக் கொண்டு ஓடினாராம்.
அவர் திரும்பிப் பார்த்தபோது அவரது கையில்
கை மட்டும் இருந்ததாம்'.
சுநந்தா
காலையில் இருந்து யோசித்துக் கொண்டு இருந்தாள்
'கடலுக்கு அந்த நிறம் அடிக்கவா? இந்த நிறம் அடிக்கவா?
கடலை அசுரன் போலக் காட்டவா?' எனக் கேள்விகள்
'அந்தமான்' சித்தியிடம் தொலைபேசச் சொன்னேன்
சுனாமி பற்றி உண்மைப் படத்தைத் தெரிந்து கொள்ளட்டும் என
பேசி முடித்துவிட்டுக் கதறி அழுது கொண்டு இருக்கிறாள்
திக்கித் திணறி "எங்க டீச்சரிடம் என்னால் வரைய முடியாது
என சொல்லி எழுதிக் கொடுங்கள்" எனச் சொல்லிவிட்டு
இன்னும் அழுது கொண்டு இருக்கிறாள்
சித்தியிடம் கேட்டேன் என்ன சொன்னபோது உடைந்தாள் என
என்னிடம் அவர் ஏற்கனவே சொன்னதுதான்...
'எத்தனையோ பேர் கடலிடம் தப்பி ஓடிக்கொண்டு இருந்தபோது
ஒரு தந்தை மகளை இழுத்துக் கொண்டு ஓடினாராம்.
அவர் திரும்பிப் பார்த்தபோது அவரது கையில்
கை மட்டும் இருந்ததாம்'.
சுநந்தா