Sunday, February 27, 2011

பொன்வண்டு

பத்து விரல்களையும் இறுகக்கூட்டி
கூடு போலமைத்த உள்ளங்கை சிறையின்
வெற்றிடத்தினுள் குதித்தாடிக்கொண்டும்
ஊர்ந்து சென்றுகொண்டும் உள்ளேயே
பறந்து கொண்டும்  குட்டிப்பொன்வண்டு
சுற்றிவர சிறுமி சிரித்துக் கொண்டிருக்க
முரட்டு விரல்கள் சின்ன விரல்களைப்
பிரித்தெடுத்துப் பொன்வண்டை விடுவிக்க
பறந்து போன வண்டு மீண்டும் குட்டிப்
பூவிரலில் வந்தமர்ந்து கொண்டது
முரட்டுவிரல்கள் திகைத்துத்
தலையிலடித்தபடி போயின.

சுநந்தா