வலிக்க வலிக்கத் துடுப்புப் போடாமல்
கண்கள் மங்கத் தொலைவில் நோக்காமல்
போய்ச் செய்ய வேண்டியதை யோசியாமல்
செய்து வந்தவற்றைச் சிந்தியாமல்
கடப்போமோ என்பதும் தெரியாமல்
மூழ்கிடுவோமோ என்றும் அறியாமல்
மிதத்தலை மட்டுமே ரசித்தபடி..
பாய்மரம் கட்டியாயிற்று
காற்றின் போக்கிலே
இலக்கில்லாப் பயணம்.
சுநந்தா