Wednesday, October 10, 2012

காற்றின் போக்கில்!


வலிக்க வலிக்கத் துடுப்புப் போடாமல்
கண்கள் மங்கத் தொலைவில் நோக்காமல்
போய்ச் செய்ய வேண்டியதை யோசியாமல்
செய்து வந்தவற்றைச் சிந்தியாமல்
கடப்போமோ என்பதும் தெரியாமல்
மூழ்கிடுவோமோ என்றும் அறியாமல்
மிதத்தலை மட்டுமே ரசித்தபடி..
பாய்மரம் கட்டியாயிற்று
காற்றின் போக்கிலே 

இலக்கில்லாப் பயணம்.

சுநந்தா

Thursday, July 5, 2012

விதை

சின்ன விதை அது
எதிர்காலக் கனவுகளுடன்
நிகழ்கால மகிழ்வுடன்
இறந்தகாலமறியா நிறைவுடன்
என் கையில்

அதன் காலங்கள் உணர்ந்து
மகா விருட்சத்தை
விதைக்கும் விதமும்
இடமும் தேடிப்
பயந்தபடி நான்

சுநந்தா.