பெருக்குமாறை எடுத்துச்சென்று
வாசலைப் பெருக்கினேன்
எங்கிருந்து வந்தது இவ்வளவு குப்பை
பெருக்கிய வாசல் சுத்தமானதும்
வாசல் சின்னதாய் ஆனதுபோல..
மீண்டும் வீசி வீசி வாரி யெடுத்து
வாசலைப் பெரிதாக்கினேன்
வாசல் கொஞ்சம் பரவாயில்லை
ஆயினும் பத்தாது என
இன்னும் வேகமாகப் பெருக்கி
வீட்டை முறத்தில் அள்ளியெடுத்து
குப்பையில் போட்டதும்
வாசல் அழகு அள்ளிக்கொண்டு போனது.
பெரியதாகக் கோலமிட்டேன்
வீடு எதற்கு வாசல் போதும்.
சுநந்தா
வாசலைப் பெருக்கினேன்
எங்கிருந்து வந்தது இவ்வளவு குப்பை
பெருக்கிய வாசல் சுத்தமானதும்
வாசல் சின்னதாய் ஆனதுபோல..
மீண்டும் வீசி வீசி வாரி யெடுத்து
வாசலைப் பெரிதாக்கினேன்
வாசல் கொஞ்சம் பரவாயில்லை
ஆயினும் பத்தாது என
இன்னும் வேகமாகப் பெருக்கி
வீட்டை முறத்தில் அள்ளியெடுத்து
குப்பையில் போட்டதும்
வாசல் அழகு அள்ளிக்கொண்டு போனது.
பெரியதாகக் கோலமிட்டேன்
வீடு எதற்கு வாசல் போதும்.
சுநந்தா
இயல்பான வரிகள்..
ReplyDeleteஅஹமது இர்ஷாத்
ReplyDeleteRomba Thanksnga. :-) (sorry tamil il type panna mudiyalai. name mattum cut and paste pannitten)