Thursday, October 8, 2009

மனமூடி..

அறிமுகப் புன்னகை பார்த்தால்
இறுகிக் கொள்ளும் முகம்
யாரைப்பார்த்தும் எதைப்பார்த்தும்
விலகித் தனித்துச் செல்லும் நடை

நீளும் கரம் கண்டால்
கொடுக்கவோ காக்கவோ
நெருங்கவோ நேரிடுமென
மூடிக்கொள்ளும் கரம்

கண்களைப் பார்த்தால்
கருணையோ காதலோ
கவிழ்த்துவிடுமென
கண் தவிர்க்கும் கண்கள்

இத்தனையும் என்னிடத்தில்
இயல்பாகக்கொண்ட நான்
எல்லோரிடமும் புன்னகைத்துக்
கைப்பற்றிக் கண்பார்த்துப் பேசுகிறேன்

மித்ரா

No comments:

Post a Comment