Friday, October 30, 2009

சந்தேகமாக

புன்சிரிப்பு உதட்டில் பூசி

கண்களில் பொய்க் கனிவுதீட்டி

மனதையும் மனிதத்தையும்

கழட்டி வைத்துவிட்டு

வெளியில் கிளம்புகிறேன்

வழியில் என்னைச்

சந்திப்பவர்களின் இதயமும்

அவர்களின் கைப்பைகளுக்குள்

மறைந்துள்ளதோ

என சந்தேகம் வருகிறது.


சுநந்தா.

No comments:

Post a Comment