Tuesday, October 27, 2009

நானும் சேர்ந்து..

எங்கும் தெறித்துச் சிதறியபடியும்

எல்லாம் நிறைந்து வழிந்தபடியுமாயுள்ள

உன்நினைவுகளை எல்லாம் அள்ளி அள்ளிச்

சேகரித்து தாவியும் நழுவியும்

ஓடியவற்றையெல்லாம் மீண்டும் ஓடிப்பிடித்து

ஒருவழியாய் மூட்டையாகக்கட்டி

சுமக்கவியலாமல் சுமந்து சென்று

நடுக்கடலில் தூக்கியெரிந்துவிட்டேன்

மூழ்கியது மூட்டையும் நானும்தான்.
சுநந்தா

No comments:

Post a Comment