Sunday, February 28, 2010

கதவும் நானும்

இதோ இப்போது காற்றினால் அறைந்து மூடிய கதவின் வேகம்
அதன் கோபத்தையும் என் கோபத்தையும்
சரியாகக் காட்டுவதாகத் தோன்றுகிறது
அறைக்கதவு மூடிய வேகத்தில் சிதறடிக்கப்பட்டவையும்
என் கோபத்தால் சிதறடிக்கப்பட்டவையும்
மீண்டும் ஒன்று சேர்க்க முடியாத நிலையில்.
அடித்து மூடியபின் அழித்த அகங்காரத்தில்
அமைதியாக நிற்கும் கதவு
கொட்டித் தீர்த்து அமைதியாக நிற்கும் என்னை
புரிந்துகொண்டது போலப் பார்க்கிறது.
“நானாக அறைந்து சாத்தவில்லை உன்னை வேறொன்று
இயக்கியது போல என்னைக் காற்று இயக்கியது.. ” என
எனக்கும் அதற்கும் சாதகமாகப் பேசிக்கொண்டு…
சுநந்தா

No comments:

Post a Comment