Wednesday, September 2, 2009

மயக்கம்

வளைந்து ஆடிய பாம்பின்
அழகில் மகுடிக்காரன்
மயங்கி விழுந்தான்

பாம்பு அவனைப்
பொட்டலமாகச் சுருட்டி எடுத்துச்
சென்றது வளைக்குள்

கண் திறந்து பார்த்தவனைப்
பாம்பு மெல்ல முத்தமிட
பாம்பாட்டி நீலமானான்

திக்கித் திணறிக் கைகூப்பி
கடவுளிடம் கத்தினான்
'மன்னித்திடு இவ்வழகிய பாம்பை'.
சுநந்தா

2 comments: