வளைந்து ஆடிய பாம்பின்
அழகில் மகுடிக்காரன்
மயங்கி விழுந்தான்
பாம்பு அவனைப்
பொட்டலமாகச் சுருட்டி எடுத்துச்
சென்றது வளைக்குள்
கண் திறந்து பார்த்தவனைப்
பாம்பு மெல்ல முத்தமிட
பாம்பாட்டி நீலமானான்
திக்கித் திணறிக் கைகூப்பி
கடவுளிடம் கத்தினான்
'மன்னித்திடு இவ்வழகிய பாம்பை'.
சுநந்தா
அழகில் மகுடிக்காரன்
மயங்கி விழுந்தான்
பாம்பு அவனைப்
பொட்டலமாகச் சுருட்டி எடுத்துச்
சென்றது வளைக்குள்
கண் திறந்து பார்த்தவனைப்
பாம்பு மெல்ல முத்தமிட
பாம்பாட்டி நீலமானான்
திக்கித் திணறிக் கைகூப்பி
கடவுளிடம் கத்தினான்
'மன்னித்திடு இவ்வழகிய பாம்பை'.
சுநந்தா
:) Gud.. Meaning Full..
ReplyDeleteSivaji Sankar
ReplyDeleteThankyou very much for your comment. :-)