Wednesday, November 18, 2009

உன்னுடனானது..

மயிலிறகினால்
வானவில்லில் மை எடுத்து
அடர்நீலத்தில் அதிகம் தோய்த்து
பூவிதழில் எழுதிய
மெல்லிய
நேசமும் அதுதான்

சரியாகத் திட்டமிட்டுச்
சிதறிட்ட ஓவியமாய்
கருஞ்சிவப்பாய்
நொருக்கி அழித்த சிற்பமாய்
கனவிலும் வலிக்கின்ற
துரோகமும் அதுதான்
சுநந்தா

No comments:

Post a Comment