Friday, November 27, 2009

ஒளியில் விழுந்து..

விளக்கில் போய் விழும்
விட்டில் பூச்சியாய்
ஒளியில் விழுந்து
விழுந்து சாகிறாய்.
விதி எனச் சொல்லி
மனது தேற்றி மீண்டும்
மீண்டும் சாகாமல்
ஏதோ திசையில்
இருளாக இருப்பினும்
பறந்து பார்த்தால்
பாதை அறியலாம்.


சுநந்தா

No comments:

Post a Comment