Sunday, November 22, 2009

ஒரு ஓவியம்

அந்த ஓவியன் வரைந்துகொண்டு இருந்தான்
அப்படிச் செய்யாதே இப்படிச்செய்யாதே
எனக் கூறிக்கொண்டே இருந்த
முதியவர்களையும்
மீண்டும் மீண்டும் அப்படியும் இப்படியும்
செய்துகொண்டே இருந்த
சிறுவர்களையும்
அப்படி வரையாதே இப்படி வரையாதே என
அவனுக்குச் சொல்லிக் கொண்டிருந்த
சிறுமியையும்.

சுநந்தா

No comments:

Post a Comment